வித்யா, ஆனந்த், ஆனந்தராமன் வீடுகளில் மூணாறு போலீஸ் ரெய்ட்
சென்னை:
![]() |
சென்னை அருகே உள்ள பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராமன். இவருக்கும்அதே பகுதியைச் சேர்ந்த வித்யாவுக்கும் திருமணம் நடந்தது. இருவரும்தேனிலவுக்காக மூணாறு சென்றபோது ஆனந்தராமன் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைக்கு திட்டமிட்டதே வித்யாதான் என்பது போலீஸ் விசாரணையில்தெரிய வந்தது. இதையடுத்து வித்யா, கொலையைச் செய்த வித்யாவின் காதலன்ஆனந்த், அவரது நண்பர் அன்புராஜ் ஆகியோரை கேரள போலீஸார் கைது செய்தனர்.
தேவிகுளம் சிறையில் 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் மூணாறுபோலீஸார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் குட்டி தலைமையில் பம்மல் வந்தனர்.
![]() |
ஆனந்தராமனின் பெற்றோரையும் அவர்கள் விசாரித்தனர்.
அதன் பின்னர் வித்யா வீட்டுக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்போது வித்யாவின் பெற்றோர், ஆனந்த் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாதுஎன்று கூறி விட்டனர்.
இதையடுத்து அன்புராஜ் வீட்டிலும் விசாரணை நடந்தது.
அதன் பிறகு ஆனந்த் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அங்கு ஆனந்த்தின்பெற்றோர்கள் வைத்திருந்த வித்யா, ஆனந்துக்கு எழுதிய காதல் கடிதங்கள், காதல்பரிசுகள் உள்ளிட்டவற்றை ஆனந்த்தின் தந்தை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
மேலும் வித்யா தனது வீட்டுக்கு பலமுறை வந்தது குறித்தும், ஆனந்த்-வித்யா காதல்குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்துவீடுகளிலும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
![]() |















Click it and Unblock the Notifications