ஆந்திர அரிசியும், சட்டீஸ்கர் அரிசியும்!அமைச்சர் வேலுவின் சர்ச்சை உவமானம்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

ஆந்திராவிலிருந்து வரும் அரிசியும், சட்டீஸ்கரிலிருந்து வரும் அரிசியும் எப்படிஇருக்கிறது என்பதற்கு பெண் அதிகாரியையும், நாகர்கோவில் எம்.எல்.ஏவையும்உவமானமாக காட்டிப் பேசி சர்ச்சையை எழுப்பியுள்ளார் உணவுத்துறை அமைச்சர்ஏ.வ.வேலு.

நாகர்கோவிலில் உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நிடந்தது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அதிகாரிஜோதி நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வேலு பேசினார். அப்போது சிலநிருபர்கள் ரேஷன் அரிசி தரமற்றதாக இருப்பதாக புகார் கூறப்படுவது குறித்துக்கேட்டனர்

அதற்குப் பதிலளித்த வேலு, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாகவேஇருக்கிறது. ஆந்திராவிலிருந்து வரும் அரிசி நன்றாகத்தான் உள்ளது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் நமது மாவட்ட வருவாய் அதிகாரிஜோதி நிர்மலாவைப் போல உள்ளது. சட்டீஸ்கரிலிருந்து வரும் அரிசி நமதுநிாகர்கோவில் எம்.எல்.ஏ ராஜனைப் போல கருப்பாக உள்ளது என்று கூறினார்.

இதைக் கேட்டதும் அதிகாரி ஜோதி நிர்மலாவின் முகம் சட்டீஸ்கர் அரிசியைப் போலகருத்துப் போய் விட்டது. மற்ற அதிகாரிகள் மத்தியிலும், நிருபர்கள் மத்தியிலும்சலசலப்பு எழுந்தது.

இதைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்ட அமைச்சர் வேலு, ஒருஉதாரணத்திற்காகத்தான் இவ்வாறு கூறினேன். மற்றபடி ரேஷன் அரிசியைக் குறை கூறமுடியாது என்று கூறிவிட்டு கிளம்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+