மத்திய அரசை நான் மிரட்டவில்லை: கருணாநிதி
சென்னை:
என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு நான் மிரட்டல் விடுத்ததாககூறுவது தவறு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், என்.எல்.சி. பங்குவிலக்கல் முடிவை மத்திய அரசு கைவிடாவிட்டால் ஆட்சிக்கு தரும் ஆதரவை திமுகவிலக்கிக் கொள்ளும் என்று நான் கூறியதாக சில ஏடுகளில் வந்துள்ள செய்திகள்தவறானவை.நான் மத்திய அரசை எச்சரிக்கவும் இல்லை. வடக்கிலும், தெற்கிலும் உள்ள சிலஏடுகள் இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது மிக மிகத் தவறானது.
இந்த நிலையில் திமுக, மத்திய அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்துயோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் நான் குறிப்பிட்டேன்.
மாறாக, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டி வரும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.
நான் சொல்லாத ஒன்று நடக்க வேண்டும் என்றோ, அல்லது கூட்டணிக்குள் பிளவுஎப்போது வரும் என்று காத்திருக்கும் கழுகுகளின் எதிர்பார்ப்புககு ஜனநாயகத்தைஇரையாக்கிட நான் தயாராக இல்லை.
அண்ணா மறைந்த பிறகு நான் முதல்வர் பொறுப்பேற்று டெல்லியில் பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான முதல்வர்கள் மாநாட்டில் தன் முதலாக பேசியபோதே,வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினேன்.
அப்போது துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் எனது கருத்தை மறுத்துப் பேசினார்.ஆனால் சில நாட்களிலேயே 14 வங்கிகளை பிரதமர் இந்திரா காந்திதேசியமயமாக்கினார்.
அதற்காக திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும், ராஜாஜி மண்டபம் முன்புள்ளமைதானத்தில் பாராட்டு விழா நடத்தினோம். அந்த விழாவில் 14 பொருட்களைபரிசாக வழங்கினேன் நான்.
மேலும் எனது ஆட்சிக்காலத்தில்தான் டி.வி.எஸ்., ராமன் அண்டு ராமன், ஏ.பிடி.,எஸ்.ஆர்.வி.எஸ். ஆகிய நிறுவனங்களின் பேருந்துகளை நாட்டுடமையாக்கினேன்.
அதன் பின்னர்தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உருவாகின. என்னைநண்குணர்ந்த நல்லவர்கள் அறிந்த உண்மை இது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications