அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் மரணம்
மதுரை:
புகழ் பெற்ற அரவிந்த் கண் மருத்துவனையை நிறுவியரும், மிகச் சிறந்த கண்மருத்துவருமான டாக்டர் ஜி.வெங்கடசாமி மதுரையில் காலமானார். அவருக்கு வயது88.
ஜிவி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் வெங்கடசாமி. தூத்துக்குடிமாவட்டம் வடமலாபுரம் கிராமத்தில் 1918ம் ஆண்டு பிறந்தவர் வெங்கடசாமி.சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த வெங்கடசாமி,ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார்.
அதன் பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவில்பேராசிரியராக பணியாற்றினார். பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியின் உதவிஇயக்குநராக பணியாற்றினார்.
அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிரபலமான அரவிந்த் கண்மருத்துவமனையை மதுரையில் நிறுவினார். 1976ம் ஆண்டு மதுரையில்தொடங்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனை வெகு சீக்கிரமே பிரபலமடைந்தது.
மதுரையைத் தொடர்ந்து தேனி, திருநெல்வேலி, கோவை, பாண்டிச்சேரி ஆகியஊர்களிலும் மருத்துவமனைகளைத் தொடங்கினார் வெங்கடசாமி.
தமிழகத்தில் கண் மருத்துவத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது அரவிந்த்மருத்துவமனை. இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்துவதில்முன்னோடி மருத்துவமனையாக அரவிந்த் திகழ்கிறது.
இந்த நிலைக்கு அரவிந்த் மருத்துவமனையை உயர்த்தியதில் வெங்கடசாமியின் பங்குமிகப்பெரியது. தமிழகம் தவிர இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கூட மதுரை அரவிந்த் கண் மருத்துவனைக்குசிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இலங்கை முன்னாள் பிரமதர் ஸ்ரீமாவோ இங்குதான் கண் அறுவைச் சிகிச்சைமேற்கொண்டார். பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள வெங்கடசாமி,பத்பஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் மருத்துவத் துறைக்கே தன்னைஅர்பணித்துக் கொண்டவர் வெங்கடசாமி. இவருக்கு டாக்டர் நாச்சியார் (இவரும்பிரபலமான மருத்துவர்) என்ற சகோதரியும், நல்லகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியஇரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
டாக்டர் வெங்கடசாமியின் உடல் மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில்வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
வெங்கடசாமியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முதல்வர்கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications