வி.சிறுத்தைகளின் ஈழத் தமிழர் ஆதரவு பேரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளைக்கண்டித்தும், இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடக் கோரியும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.

மன்ரோ சிலையிலிருந்து தொடங்கிய பேரணியை தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ. நெடுமாறன் தொடங்கி வைத்தார். பேரணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

திருமாவளவன் பேசுகையில், இந்திய அரசு உடனடியாக இலங்கைப் பிரச்சினையில்தலையிட வேணடும். ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும்.

இலங்கைக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவிதமான ராணுவஉதவிகளையும் இந்திய அரசு செய்யக் கூடாது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியாதலையிட மத்திய அரசை, மாநில அரசுதான் வலியுறுத்த வேண்டும்.

அதை வலியுறுத்தவே இந்த பேரணியும, பொதுக் கூட்டம் என்றார் திருமா.பேரணியில், மதிமுக துணை பொதுச் செயலாளர் முல்லை சத்யா, அகில இந்தியமூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், நடிகர் மன்சூர் அலிகான்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பேரணி சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே முடிவடைந்தது. அதன்பின்னர் தொல். திருமாவளவன், ஈழத் தமிழர் ஆதரவு கோஷங்களை எழுப்பதொண்டர்கள் திருப்பிக் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+