அரசியல் சட்ட திருத்தத்துக்கு தயாராகும் இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து யோசித்துவருவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

பெடரல் ஆட்சி முறையை கொண்டு வந்து, அதிகாரப் பரவலாக்கல் மூலமும், மாகாணங்களுக்கு அதிக அதிகாரம்வழங்குவதன் மூலமும் தான் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என பல நாடுகளும் இலங்கையையோசனை கூறி வருகின்றன.

இதுவரை இந்த யோசனைகளை இலங்கை ஏற்காமல் இருந்து வந்தது. இந் நிலையில் அரசியல் சட்டம் திருத்தம்கொண்டு வருவது குறித்து யோசிக்கப் போவதாக இலங்கை கூறியுள்ளது. ஆனால், எந்த வகையான திருத்தத்தைஅரசு கொண்டு வரும் என்று தெரியவில்லை.

இது குறித்து அரசு அமைதிச் செயலகத்தின் தலைவர் பலித கொஹனா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்றுஅளித்த பேட்டியில்,

அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்தஆலோசனைகளுக்கு கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கவில்லை. ஆனால், விரைந்து ஆலோசனைகளை முடித்துஅரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து இனப் பிரச்சனையை தீர்க்க தீவிரமாக உள்ளோம்.

இக் கூட்டத்தில் சிங்கள, முஸ்லூம், புலிகளுக்கு எதிரான தமிழர் கட்சிகள் மற்றும் 15 பேர் கொண்ட நிபுணர் குழுகலந்து கொள்ளும். இந்த நிபுணர் குழுவில் தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர் என்றார்.

ஆனால், புலிகளுக்கு எதிரான கோஷ்டிகளை இந்தக் குழுவில் இடம் பெறச் செய்துள்ளதன் மூலமும், சிங்களஇனவாதிகள் இடம் பெற்றுள்ளதாலும் இந்தக் குழு எந்த அளவுக்கு நடுநிலையுடன் இருக்கும் என்றுதெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+