தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வன்முறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தேர்தல்வாக்குப்பதிவின்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. வாக்குச் சீட்டுக்கள் தீ வைத்துஎரிக்கப்பட்டன.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராம.நாராயணன் ஏற்கனவே போட்டியின்று தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஞாயிற்றுக்கிழமை தேர்தல்நடந்தது.

பிரச்சினை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஏராளமான போலீஸார்பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்த், ராதிகா உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்தலில்வாக்களித்தனர்.

மாலையில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பொருளாளர் பதவிக்குப்போட்டியிட்ட அழகன் தமிழ் மணி வெற்றி பெற்றதாகவும், துணைத் தலைவர்பதவிக்கு ஏ.எம்.ரத்னம், வி.சேகர் ஆகியோர் வெற்றி பெற்றதாகவும்அறிவிக்கப்பட்டது.

செயலாளர் பதவிகளுக்கு கமீலா நாசர் மற்றும் கேயார் ஆகியோர் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டது. இந்த முடிவுகளுக்கு அன்பாலயா பிரபாகரன், கே.ராஜன்ஆகியோரது ஆதரவாளர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இவர்கள் தலைவர் ராம.நாராயணனின் அணியைச் சேர்ந்தவர்கள். தேர்தல் முடிவுகளைஏற்க முடியாது, கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர் என்று கூறி கே.ராஜன் கோஷ்டி கடும்எதிர்ப்பு தெரிவித்தது.

மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர். இது பின்னர் கலவரமாகமாறியது. ராஜன் ஆதரவு தயாரிப்பாளர்கள் சிலர், வாக்குப் பெட்டிகளை எடுத்து வந்துவாக்குச் சீட்டுக்களுக்கு தீவைத்து எரித்தனர்.

இதனால் திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அடிதடியாக இது மாறுவதற்குள் போலீஸார் தலையிட்டு கலவரத்தில்ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

இந்தத் திடீர் திருப்பத்தால், தேர்தலை ரத்து செய்வது குறித்து சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையில் தயாரிப்பாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+