திருசெந்தூர், தூத்துக்குடியில் உள்வாங்கிய கடல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை திடீரென கடல் உள் வாங்கியது. இதனால்கடலோரப் பகுதிகளில் பீதி நிலவுகிறது.
2004ம் ஆண்டு சுனாமிக்குப் பின் தமிழக கடல் பகுதிகளில் திடீர் திடீரென ஏற்படும் மாற்றங்கள் பெரும்அச்சத்தை தந்து வருகின்றன. சுனாமியைத் தொடர்ந்து கடல் உள்வாங்குவது சாதாரணமானது.பல மீட்டர் தொலைவுக்கு கடல் நீர் உள்ளே போய்விடுவது, கடலடி பாறைகள், தாவறங்கள், தரை எல்லாம்தட்டுப்படுவது என அடிக்கடி நடந்து வந்தது. ஆனால், சமீப காலமாக இந்த கடல் உள்வாங்கல் குறைந்திருந்தது.
இந் நிலையில் இன்று காலை 8 மணியளவில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது. சுமார் 100 அடிக்கு திடீரெனகடல் நீர் உள்ளே போய்விட்டதால், கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்தனர். சுனாமி வரப்போகிறதோ என்ற அச்சத்துடன் கடலோரத்தை விட்டு அகன்றனர்.
அதே போல தூத்துக்குடியிலும் கடல் பல அடி தூரம் உள்வாங்கி தரை தெரிந்தது.
திருச்செந்தூரில் சில மணி நேரத்தில் கடல் பழைய நிலையை அடைந்துவிட்டது. ஆனால், தூத்துக்குடியில்தொடர்ந்து பிற்பகல் வரை கடல் சகஜ நிலைக்கு வரவில்லை.
இதனால் அந்தப் பகுதிகளில் அச்சம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications