ஃபெப்சி விஜயனிண் அண்ணன் வறுமையால் தற்கொலை!
சென்னை:
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஃபெப்சி விஜயனின் அண்ணன் ரமேஷ் வறுமை காரணமாகதற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (41).இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஃபெப்சி விஜயனின் அண்ணன் ஆவார்.ரமேஷ் திரைப்படங்களில் ஸ்டண்ட் மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2மனைவிகள். முதல் மனைவியான பானுமதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரைவிட்டுப் பிரிந்து 2வது மனைவி உஷா ராணியுடன் வசித்து வந்தார்.
வழக்கம் போல இரவு கணவனும், மனைவியும் தூங்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில்வீட்டில் ஏதோ சப்தம் கேட்டதால் உஷாராணி விழித்தெழுந்து விளக்கைப்போட்டுள்ளார்.
அப்போது மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்ட நிலையில் ரமேஷ் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தார். அலறி அடித்த எழுந்த உஷாராணி ரமேஷை கஷ்டப்பட்டுகீழே இறக்கி அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவியுடன் சாலிகிராமத்தில்உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு ரமேஷைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாத அளவுக்கு வறுமையில் வாடி வந்துள்ளார்ரமேஷ். சரியாக வேலையும் இல்லாத நிலை.
இதனால் மனம் உடைந்த அவர் தற்கெலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் அண்ணன் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டது, திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.