குடிபோதையில் கலாட்டா- நீதிபதி கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோபத்தில் குடித்து விட்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றவளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்து கண்ணாடி ஜன்னலை உடைத்து, பாதுகாப்புக்குஇருந்த காவலாளியை தாக்கிய மாஜிஸ்திரேட் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவராக பணியாற்றியவர்ராமராஜ். இவர் மீது சில ஊழல் புகார்கள் கூறப்பட்டதையடுத்து, ராமராஜை தற்காலிகபணி நீக்கம் செய்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ராமராஜ், நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசுக் குடியிருப்பில்வசித்து வருகிறார். இந் நிலையில் அதிகாலை இரண்டரை மணியளவில் குடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்தார் ராமராஜ்.

பின்னர் கீழே கிடந்த கற்களை எடுத்து நீதிமன்றத்தின் கண்ணாடி ஜன்னலில் எறிந்தார்.இதில் கண்ணாடி உடைந்தது.

இதைப் பார்த்த காவலாளி நாகூரான் ஓடி வந்து தடுக்க முயற்சித்தார்.

அப்போது அவரை ராமராஜ் அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார் நாகூரான்.

மாஜிஸ்திரேட்டே இவ்வாறு குடித்துவிட்டு, அரிவாளை தூக்கிக் கொண்டு தகராறுசெய்ததால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் மேலிடத்திற்குத் தகவல்கொடுத்தனர்.

அங்கிருந்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு வந்ததும் வழக்குப் பதிவு செய்துராமராஜைக் கைது செய்தனர்.

மன்னார்குடி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமராஜை 15 நாள்சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராமராஜ் சிறையில்அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே மாஜிஸ்திரேட் ராமராஜின் செயலுக்கு திருத்துறைப்பூண்டி வக்கீல்கள்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+