விடைபெற்றது ராமேஸ்வரம் மீட்டர்கேஜ் ரயில்!
ராமேஸ்வரம்:
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையைஅகலப்பாதையாக மாற்றும் பணி இன்று தொடங்குகிறது.
இதையடுத்து ராமேஸ்வரம் மக்களுக்கு நீண்ட காலமாக சேவையாற்றி வந்த மீட்டர்கேஜ் ரயில்கள் நேற்றுடன் பிரியா விடை பெற்றன.தென்கோடியில் கிழக்கே கடலில் அமைந்துள்ள அழகிய தீவுதான் ராமேஸ்வரம்.சரித்திரப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்திற்கு ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாதைஅமைக்கப்பட்டது.
அந்த ரயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாகும். இந்தப் பாதையை அகலப் பாதையாகமாற்றி அமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
அகலப் பாதையாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு நேரடிரயில் போக்குவரத்துக் கிடைக்கும், ராமேஸ்வரம் பொருளாதார ரீதியாகவும், சுற்றுலாரீதியாகவும் பெரும் வளர்ச்சி அடையும் என்பதால் அகலப் பாதை கோரிக்கைவலுத்தது.
இதைத் தொடர்ந்து மத்திய ரயில்வே துறை ராமேஸ்வரம் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்ற முடிவெடுத்தது.
இதன்படி மதுரை ராமேஸ்வரம் இடையிலான பாதையை அகலப் பாதையாக திட்டம்தீட்டப்பட்டு பணிகள் தொடங்கின.
முதல் கட்டமாக மதுரை-மானாமதுரை இடையிலான பணி முடிவடைந்தது.இரண்டாவது கட்டமாக மானாமதுரை-மண்டபம் இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்படவுள்ளது. அந்தப் பணி இன்று தொடங்குகிறது.
ரூ. 114 கோடி செலவில் கிட்டத்தட்ட 96.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அகலப் பாதைபோடப்படவுள்ளது. 9 புதிய ரயில் நிலையக் கட்டடங்கள், 141 சிறிய பாலங்கள், 7பெரிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
இப்பணியையொட்டி ராமேஸ்வரத்திற்கான ரயில் போக்குவரத்து இன்றுடன்நிறுத்தப்படுகிறது. தாம்பரம்-ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ், மானாமதுரை-ராமேஸ்வரம் பாசஞ்சர் (மொத்தம் 3 ரயில்கள்) ஆகியவை இன்று முதல் ரத்துசெய்யப்படுகின்றன.
இதில் சேது எக்ஸ்பிரஸ் காரைக்குடி வரை இயக்கப்படும். அதன் பின்னர் ரத்துசெய்யயப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு மார்க்கத்தில், திருச்சி முதல்ராமேஸ்வரம் இடையிலான மீட்டர் கேஜ் பாதையும் அகலப் பாதையாக மாற்றப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது புதுக்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான பாதைஅகலப் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications