For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டுவெடிப்பு: ஜனாதிபதி விருது பெற்றவர் கைது!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற ஒருவரைடெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 11ம் தேதி மும்பை ரயில்களில் வெடித்த பயங்கர குண்டுவெடிப்புச்சம்பவத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தாங்கள்தான் காரணம்என லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான லஷ்கர் இகுவாஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லி,அஜீஸ் உசைன் குவாஜா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை ரயில்களில் குண்டுவைத்த தீவிரவாதிகளுக்கும், இவருக்கும் நெருங்கியதொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.

குவாஜா ஒரு கைவினைக் கலைஞர் ஆவார். கடந்த 2003ம் ஆண்டு சிறந்த கைவின்ப்பொருட்கள் தயாரிப்புக்கான குடியரசுத் தலைவரின் தேசிய விருது பெற்றவர்.குடியரசுத் தலைவரிடமிருந்து இவர் விருதைப் பெற்றுள்ளார்.

தெற்கு டெல்லியில் உள்ள ஜங்புரா என்ற இடத்தில் இவர் வசித்து வருகிறார்.தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் மற்றும் பணத்தை இவர்தான் விநியோகித்ததாகபோலீஸார் கருதுகிறார்கள். மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி முக்தார்அகமதுவுக்கு இவர் ஹவாலா மூலம் பணம் விநியோகித்ததும் தெரிய வந்துள்ளது.

இவரைக் கைது செய்த டெல்லி போலீஸார் 2 கிலோ ஆர்.டி.எக்ஸ், வெடிமருந்துமற்றும் ரூ. 49 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X