இந்தியா கேட்டில் இன்றும் வெடிகுண்டு மிரட்டல்!
டெல்லி:
டெல்லி இந்தியா கேட் பகுதியில் இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும்பீதி ஏற்பட்டது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை வெடிகுண்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நேற்று மிரட்டல் வந்தது.இதையடுத்து அங்கு போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் இதில்வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்தியா கேட்டில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக மும்பை போலீஸாருக்குத் தகவல் வந்தது.
அதைத் தெரிவித்தவர், சரியாக பகல் 12 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு இந்தியாகேட்டில் வெடிக்கும் என்று தெரிவித்தார். உடனடிாயக டெல்லி போலீஸாரை, மும்பைபோலீஸார் உஷார்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து ராணுவ மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன்போலஸீார் இந்தியா கேட்டை முற்றுகையிட்டு தீவிர சோதனை நடத்தினர். இதில்வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் இந்தியா கேட்டைச் சுற்றிலும் காவல் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கியப் பகுதிகளிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 வது நாளாக இந்தியா கேட்டுக்கு வெடிகுண்டுமிரட்டல் வந்ததால் டெல்லி மக்களிடையே பீதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications