பொடா சட்டம் மீண்டும் வேண்டும்: ஜெ.
சென்னை:
பெருகி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதம் தனது கரங்களைவிரிக்கும் போதெல்லாம் உலகம் முழுவதும் பொறுப்புள்ள நாடுகள் தீவிரவாதத்திற்குஎதிரான சட்டங்களை இயற்றுகின்றன.ஏற்கனவே உள்ள சட்டங்களையும் பயன்படுத்துகின்றன.
ஆனால் இதற்கு மாறாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதுமேதீவிரவாதத்தை ஒடுக்கும் பொடா சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு முன்னுரிமைஅளித்தது.
கடந்த 15 ஆண்டுகளாகவே தீவிரவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்தியாவின் பல பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டுதான்உள்ளனர். திட்டமிட்டு குறி வைத்து தாக்குகிறார்கள்.
பொடா சட்டத்தை வாபஸ் பெற்றதன் மூலம் பொதுமக்களை பாதுகாப்பற்ற நிலைக்குஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தள்ளி விட்டது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளஒருவருக்கு கருணை அடிப்படையில மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது>.
சிறையில் இருக்கும் அந்த முதல் குற்றவாளியை அவரது மனைவி சந்திக்கவும்அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது மனைவியை கைது செய்வதற்கான வாரண்ட் உத்தரவு இன்னும்நிலுவையில் உள்ளது.
அவர் தனது கணவரை மட்டுமல்லாமல், கோவை குண்டுவெடிப்பு வழக்கில்சம்பந்தப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகளையும் சந்தித்துப் பல மணி நேரம் பேசுவதற்குஅனுமதி அளித்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
இதனால்தான் தற்போதைய முதலமைச்சரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
இந்தியாவை யாரும் மண்டியிட வைக்க முடியாது என்ற வாய் ஜால வார்த்தைகளைபேசுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
கொடியசைத்து பாகிஸ்தானுக்கு பஸ் அனுப்புவதை நிறுத்த வேண்டும். மக்கள் மனதில்நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைதான் இப்போது தேவை. அதற்கு முதல் படியாகபொடா சட்டத்தை முதலில் கொண்டு வர வேண்டும்.
மும்பை குண்டுவெடிப்பில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்தஇரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications