குண்டுவெடிப்பு: பாக். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பேற்பதாகபாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான லஷ்கர் இகுவாஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மும்பையில் கடந்த 11ம் தேதி இரவு புறநகர் ரயில்களில் நடந்த தொடர்குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 200 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை சிமிஅமைப்பும், லஷ்கர் இ தொய்பாவும் சேர்ந்து செய்திருப்பதாக முதலில் தகவல்வெளியானது.

ஆனால் மேலும் சில அமைப்புகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக பின்னர்செய்திகள் வந்தன. இந்த நிலையில் மும்பை தாக்குதலுக்கு தாங்கள்பொறுப்பேற்பதாக லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான லஷ்கர் இ குவாஹர்அறிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த அமைப்பு ஒரு இ மெயில் மூலம்இத்தகவலைத் தெரிவித்துள்ளது. அந்த இ மெயில் தகவலில், மொத்தம் 16 பேர்இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்.

காஷ்மீர் மக்களை துன்புறுத்துவதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால்இதுபோல மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே அமைப்புதான் கடந்த மார்ச் மாதம் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்புக்கும்காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புக்கு அல் கொய்தாஅமைப்புடனும் நெருங்கிய தொடர்பு உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+