கணவரின் காமவெறி: மனம் நொந்த மனைவி தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

கோவை:

கணவரின் காமப் பசிக்குத் தன்னால் ஈடு கொடுக்க முடியவில்லையே என்றுவருத்தப்பட்ட மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சோமையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கும்குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவிதாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம்நடந்தது.

திருமணமான பின்னர் கவிதா கர்ப்பம் தரித்தார். ஆரம்பத்திலிருந்தே செக்ஸில் அதிகநாட்டம் உடைய நாகராஜ், மனைவி கர்ப்பம் தரித்த போதிலும் அதைப் பற்றிக்கவலைப்படாமல் கட்டாயப்படுத்தி கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொள்வாராம்.

இதனால் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு கரு கலைந்து விட்டது.இதையடுத்து கவிதாவைப் பரிசோதித்த டாக்டர்கள், 6 மாதத்திற்கு எதுவும் கூடாது,நல்ல ஓய்வு தேவை என்று கூறி விட்டனர்.

இதனால் தனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டார் கவிதா. ஆனால் மனைவியைப்பற்றிக் கவலைப்படாத நாகராஜ், 6 மாதம் எப்படி சும்மா இருப்பது என்ற கவலையில்மூழ்கினார்.

மாமானார் வீட்டுக்குச் சென்ற அவர் மனைவியிடம் தனிமையில் இதுகுறித்து அழுதுபுலம்பி சுவற்றில் முட்டி அழுதுள்ளார். இதைப் பார்த்த கவிதா மன வேதனைஅடைந்தார். கணவரின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டதே என்றுமனம் நொந்த அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குளத்துப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+