கர்நாடகத்தில் கனமழை-மேட்டூருக்கு பாயும் நீர்

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு அணைகள் நிரம்பிவிட்டன.இதனால் அந்த நீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

கன மழையால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர்ஆகிய கர்நாடக மாநில அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிவிட்டது. இதனால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. 2 அணைகளில் இருந்தும்வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் பெரும் வெள்ளம்பாய்கிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12,056 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலைநீர்வரத்து வினாடிக்கு 17,000 கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 103.50 அடியாக உயர்ந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+