செல்போனில் படம்..மிரட்டல்-மாணவி தற்கொலை
நாகர்கோவில்:
பிளஸ்டூ படித்து வந்த மாணவியை செல்போன் மூலம் படம் எடுத்து வைத்து தங்களதுவிருப்பத்திற்கு இணங்குமாறு சில இளைஞர்கள் வற்புறுத்தியதால், மனம் உடைந்தமாணவி தற்கொலை செய்து கொண்டார்.
![]() |
படிப்பில் கெட்டிக்காரியான முத்துச்செல்வி கடந்த 14ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.அன்றைய தினம் மாலையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் சில இளைஞர்கள் செய்த ஈவ் டீசிங் கொடுமையால்தான்முத்துச்செல்வி தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.
முத்துச்செல்வி தினசரி விடுதியிலிருந்து கிளம்பி பேருந்து மூலம் பள்ளிக் கூடத்திற்குச்செல்வார். வரும்போது பள்ளியிலிருந்து மெயின் ரோட்டுக்கு சக மாணவியருடன்நடந்து வந்து பேருந்து ஏறி விடுதிக்குத் திரும்புவார்.
அவர் தினசரி பள்ளியிலிருந்து பேருந்துக்காக மெயின் ரோட்டுக்கு வரும் வழியில்நான்கு இளைஞர்கள், ஈவ் டீசிங் செய்து வந்துள்ளனர். ஒருமுறை எல்லை மீறிமுத்துச்செல்வியை மோசமான கோணத்தில் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
பின்னர் முத்துச்செல்வி தனியாக வந்தபோது அந்தப் படத்தை அவரிடம் காட்டி,எங்களது விருப்பத்திற்கு இணங்க வேண்டும், இல்லாவிட்டால் கிராபிக்ஸ் மூலம் உன்நிர்வாண படத்தை உருவாக்கி அத்தனை பேருக்கும் அனுப்பி உனது மானத்தைவாங்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன முத்துச்செல்வி தனது ஊருக்குப் புறப்பட்டுப் போயுள்ளார்.அங்கு போன பின்னர்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத்தகவலை முத்துச்செல்வியின் தாயார் ஜெயராணி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராதாபுரம் போலீஸார் நாகர்கோவில் விரைந்துள்ளனர். ஈவ் டீசிங்செய்த வாலிபர்கள் யார் என்பதை முத்துச்செல்வியின் தோழிகள் உதவியின் மூலம்பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications