மதிமுக ஒரு கற்கோட்டை: வைகோ

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:

வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக-மதிமுக கூட்டணி தொடரும். அந்த தேர்தலில் புதிய வியூகத்தைகையாள்வோம். சென்னையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அலுவலகத்துக்கு மர்ம போன்வந்தது திமுக அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.

சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போதே என் வீட்டு முன்னால் தாக்குதல்நடத்தினார்கள். அவர்கள் விட்டு சென்ற அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் செய்தால், என்மீது திமுக எம்.பி.க்களை வைத்து கொலை முயற்சி புகார் கொடுக்க கருணாநிதி ஏற்பாடு செய்கிறார்.

மதிமுகவினர் மீதும் அதிமுகவினர் மீதும் பொய் வழக்கு போடப்படுகிறது. பொய் வழக்கு மூலம் அச்சுறுத்திஎதிர்கட்சிகளை முடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். மதிமுக ஒரு கற்கோட்டை.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மனித சமுதாயத்தில் வாழ தகுதியற்றவர்கள். ஒரு பாவமும்அறியாத அப்பாவி மக்களை கொல்லும் கொடுஞ்செயல் அடியோடு களையப்பட வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது அங்குள் அரசும், மக்களும் பதறி போனார்கள்.ஆனால் மும்பை மக்கள் இதை தைரியத்துடன் எதிர் கொண்டு மனித நேயத்துடன் சேவை செய்தது இந்தியாவுக்குபெருமை சேர்ப்பதாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது அத்வானி குறை கூறியதை ஏற்க முடியாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ளேன். இந்தியா-இலங்கை ராணுவ கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் தடுத்தது மதிமுகதான் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+