நினைத்தபோதெல்லாம் சந்தோஷம் தந்தார் நிர்மலா: நவீன்குமார் பரபரப்புவாக்குமூலம்
சென்னை:
எனது மனைவியிடம் கிடைக்காத சுகத்தை நடிகை நிர்மலா எனக்குத் தந்தார்.அவருக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தேன். கொடுத்த பணத்திற்குக் கொஞ்சம் குறைவைக்காமல் என்னை சந்தோஷப்படுத்தினார் அவர் என்று முன்னாள் சென்னைபல்கலைக்கழக துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மகன் நவீன்குமார் வாக்குமூலம்அளித்துள்ளார்.
![]() |
தனது நகைகளை எல்லாம் நிர்மலாவிடம் கொடுத்தார் நவீன்குமார். என்னை விடநிர்மலாவிடமே அவர் அதிக பாசம் வைத்திருந்தார் என்று தற்கொலை செய்வதற்குமுன்பு எழுதி வைத்த கடிதத்தில் கூறியுள்ளார் மதுதேவி.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவீன்குமாரை ஒரு நாள் காவலில் எடுத்தபோலீஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதில் பல்வேறு பரபரப்புதகவல்களை வெளியிட்டுள்ளார் நவீன்குமார்.
நிர்மலாவை சில ஆண்டுகளாகத்தான் தெரியும். திருமணத்திற்குப் பின்னர் எனதுமனைவியிடம் எனக்கு சரியான சுகம் கிடைக்கவில்லை. அந்த சுகத்தை நிர்மலாதான்பூரணமாக தந்தார்.
அவருடன் நான் உறவு கொண்டுள்ளேன், அது உண்மைதான்.
எனக்கு சந்தோஷம் தருவதற்காகவே தனியாக வீடு எடுத்துத் தங்கியிருந்தார் நிர்மலா.அங்கு அடிக்கடி நான் போவேன். இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் அவர் கூட்டிச்செல்வார்.
அவருடன் நான் இருந்த நேரம் எல்லாம் மிகவும் சந்தோஷமானவை. மனைவியிடம்கூட அப்படி இருந்ததில்லை. நிர்மலாவின் அன்பு, அழகில் மயங்கி மதுதேவியின்நகைகளை அள்ளி அள்ளிக் கொடுத்தேன்.
எவ்வளவு கொடுத்தேன் என்று தெரியவில்லை.கேட்டபோதெல்லாம் நிர்மலாவுக்குபணம் கொடுத்தேன். அதையும் எனது மனைவியிடமிருந்துதான் வாங்கிக்கொடுத்தேன்.
கொடுத்த பணத்திற்கு கொஞ்சம் குறையில்லாமல் என்னை சந்தோஷப்படுத்தினார்நிர்மலா.
இரவில் தொடங்கினால் விடிய விடிய எங்களது உல்லாசம் தொடரும். அவருடன்இருந்தது எனக்கு அளவில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது. அவரது நடை, பேச்சு,உடல் அழகு, அங்கங்களின் அழகு எனக்கு அவர் மீது தீராத வெறியை ஏற்படுத்தியது.
நிர்மலாவின் அழகைப் பற்றி எனது மனைவியிடம் சொல்லி அவர் போல உடைஅணிய, பேச, நடக்கக் கூறுவேன். இது எனது மனைவிக்குப் பிடிக்கவில்லை. ஒருமுறை நிர்மலாவை எனது வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
இதனால் எனது மனைவி ஆத்திரமடைந்தார். என்னிடம் தகராறு செய்தார். இருந்தாலும்தொடர்ந்து என்னிடம் அன்பாகவே இருந்தார். இதை நான் எனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டேன், நிர்மலாவுடனான எனது உறவில் தவறில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
நான் நினைத்தபோதெல்லாம் நிர்மலாவீடம் சந்தோஷமாக இருந்தேன். அவரும்சளைக்காமல் இன்பம் தந்தார். எனது மனைவி தற்கொலை செய்து கொள்வார் என்றுநினைத்துக் கூட பார்த்ததில்லை. அந்த அளவுக்கு என் மீது அவர் பாசமாக இருந்தார்என்று கூறியுள்ளார் நிவீன்குமார்.
நவீன்குமாரின் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அவரைசைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி பின்னர்சிறையில் அடைத்தனர்.
அக்கம் பக்கத்தினர் எதிர்ப்பு: சிக்கலில் நிர்மலா
இதற்கிடையில் நவீன்குமாருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளநடிகை நிர்மலா தனது வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று அக்கம்பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மகன் நவீன்குமாருக்கும், டிவி நடிகைநிர்மலாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சல்அடைந்த நவீன்குமாரின் மனைவி மதுதேவி தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக மனோகரன், அவரது மனைவி கனகவல்லி, மகள் உமா, நவீன்குமார்ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிர்மலாவையும் இந்தவழக்கில் சேர்த்துள்ளனர்.
இதில் நவீன்குமார் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற அனைவரும் முன்ஜாமீன்பெற்றுள்ளனர். நடிகை நிர்மலா அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடிக்குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இங்கு வைத்துத்தான் நவீன்குமாரும், நிர்மலாவும் தங்களது கள்ளக் காதலைகொண்டாடி வந்துள்ளனர். இந்த செய்தி தெரிய வந்ததைத் தொடர்ந்து நிர்மலா அந்தவீட்டில் இனியும் குடியிருக்கக் கூடாது என்று அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போர்கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
நிர்மலா வசிக்கும் இந்த வீடு ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபருக்குச்சொந்தமானது. மாதம் ரூ. 6000 வாடகை கொடுத்து இங்கு வசித்து வருகிறார் நிர்மலா.இங்கு மொத்தம் 48 வீடுகள் உள்ளன.
மேல் தட்டு மக்கள்தான் அதிகம் இங்கு வசித்து வருகின்றனர். இப்போது நிர்மலாவைத்தேடியும், விசாரணைக்காகவும் போலீஸார் அடிக்கடி வருவதால் இங்கு வசிப்போர்எரிச்சலடைந்துள்ளனர்.
வயதுக்கு வந்த பெண்கள் அதிகம் இருக்கும் குடியிருப்பில் அடிக்கடி போலீஸார்வருவதும், நிர்மலா தொடர்பாக பல்வேறு சலசலப்புகள் கிளம்பியுள்ளதும்இங்குள்ளவர்களை எரிச்சல்படுத்தியுள்ளது.
எங்களுக்கென்று ஒரு கெளரவம் உள்ளது. எனவே அதைக் கெடுக்காத வகையில்நிர்மலா உடனடியாக இங்கிருந்து காலி செய்ய வேண்டும் என்று அவர்கள்கோரியுள்ளனர்.
அத்தோடு நிற்காமல் வீட்டு உரிமையாளரையும் நேரில் பார்த்து வற்புறுத்தியுள்ளனர்.அவரும் நிர்மலாவை காலி செய்யுமாறு கூறுவதாக உறுதியளித்துள்ளாராம். இந்த புதுக்குழப்பத்தால் நிர்மலா வேறு வீடு பார்த்து வருவதாக கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications