சுற்றுலாத் துறையின் அம்மன் கோவில் உலா
சென்னை:
தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 108 அம்மன்கோவில்களுக்கு பயணம் மேற்கொள்ளும் செல்லும் திட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்கள் அமலில்உள்ளன. தற்போது புதிதாக 108 அம்மன் கோவில்களுக்கு பயணம் மேற்கொள்ளும்புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மதுரை, திருச்சி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர்,மன்னார்குடி, கானாடுகாத்தான், காரைக்குடி, திருப்பத்தூர், உளுந்தூர்ப்பேட்டை,விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள 108 அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாவுக்குஏற்பாடு செய்யப்படும்.
5 நாள் பயணமாக வகுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் கோவில்களுக்குச் சென்றுவழிபட, ஒரு நபருக்கு ரூ. 2300 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தத் தொகைபோக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்கான செலவுகளை உள்ளடக்கியதாகும்.
ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சென்னையிலிருந்து இந்தகோவில் உலா தொடங்கும். பயணத்தை முடித்து விட்டு செவ்வாய் மற்றும்சனிக்கிழமைகளில் பயணிகள் மீண்டும் சென்னையில் கொண்டு வந்து விடப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், வாலாஜா சாலை,சென்னை என்ற கவரியிலும், 044-25383333 என்ற தொலைபேசி எண்ணிலும்தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications