பொடா: வைகோவுக்கு கி.வீரமணி கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கூறுவதுகுறித்து வைகோ, திருமாவளவன் ஆகியோர் தமிழக மக்களுக்கு தரும் விளக்கம்என்ன என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார்.அவருடன் கூட்டணி வைத்துள்ள வைகோ, திருமாவளவன் ஆகியோர் இதற்கு என்னபதில் சொல்லப் போகிறார்கள்? பொடாவால் பாதிக்கப்பட்ட வைகோ என்ன விளக்கம்தரப் போகிறார் என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வததோடு காத்துள்ளனர்.
பொடா சட்டம் மீண்டும் வராது என்று பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர்ப.சிதம்பரம் ஆகியோர் கூறியுள்ளனர். இதை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்வீரமணி.












Click it and Unblock the Notifications