1967லிருந்து காத்திருக்கிறோம்: இளங்கோவன்
தூத்துக்குடி:
அராஜக ஆட்சி நடத்திய ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பினோம். ஆயினும் விஷ ஜந்துகளை அடியோடு ஒழிக்கவேண்டியிருக்கிறது என மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கூறினார்.
சாத்தான்குளத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:காமராஜரின் பெருமை, தியாகங்களை எத்தனை நாள் தான் பேசிக்கொண்டிருப்பது. தமிழகத்தில் எப்போது காமராஜர்ஆட்சியமைப்பது என்ற காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகள் எனக்குப் புரிகிறது.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இப்போது காமராஜர் ஆட்சி காண முடியாத நிலையிலுள்ளது. விரைவில்அதற்கான காலம் கனியும். தமிழகத்தில் கட்சிக்கு வளர்ச்சியூட்டியவர்கள் காமராஜர், நடிகர் சிவாஜி கணேசன் ஆகிய இருவர்தான்.
அவர்கள்தான் கட்சியை உயிரோட்டமுள்ளதாக மாற்றினர். உங்கள் உள்ளத்தில் இருப்பது தான் என் உள்ளத்திலும் உள்ளது.1967லிருந்து ஆட்சிக்காக காத்திருக்கிறோம். நம்மைப்போல எந்தக் கட்சியும் இப்படி காத்திருந்தது கிடையாது.
நமக்கு ஒருநாள் வெளிச்சம் வரும், விடிவு ஒருநாள் பிறக்கும். அப்போது நாம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியமைப்போம்.தொண்டர்களின் தியாகத்தில்தான் காங்கிரஸ் கட்சி உயிரோடு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில்தொடர்வோம்.
அதே நேரத்தில் நம் லட்சியங்கள், கனவுகளை மேலிடத்திடம் சொல்லி விடுவோம். ஆனால் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாம்கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். தமிழகம் சில சங்கடங்களிலிருந்து விடுபட வேண்டும். அராஜக ஆட்சி நடத்தியவர்களைவீட்டிற்கு அனுப்பினோம். ஆயினும் விஷ ஜந்துகளை அடியோடு ஒழிக்க வேண்டியிருக்கிறது. அதுவரை பொறுத்திருப்போம்என்றார்.
இக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில்,
விபத்தின் காரணமாக அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா. அவரது அரசியல் அநாகரிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தொண்டர்கள் கடுமையாக உழைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியமைக்கமுடியும் என்றார்.












Click it and Unblock the Notifications