சங்கரராமன்: விசாரணை ஆகஸ்டுக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் ஜெயேந்திரர், விஜயேந்திரரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை தமிழகத்தில் இருந்துஇந்த பாண்டிச்சேரிக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.

மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி சின்னபாண்டி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடக்கிறது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து ஜெயேந்திரர் தாக்கல் செய்தமனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் தீர்ப்பு வெளியாகும் வரை பாண்டிச்சேரியில் வழக்குவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந் நிலையில் இந்த வழக்கு இன்று பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்பட 5 பேர் ஆஜராகவில்லை. 19 பேர் ஆஜராகினர்.

அப்போது பேசிய ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள், இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. வரும் 31ம் தேதி தான் ஜெயேந்திரரின் மனு மீது உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணைநடத்தவுள்ளது என்றனர்.

இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 24க்கு நீதிபதி சின்னப்பாண்டி ஒத்தி வைத்தார்.

ஜெயேந்திரர் மனு மீது 31ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது தமிழக அரசின் சார்பில் அதற்குபதில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+