இரும்பு வியாபாரியிடம் சரத்குமார் ரூ. 95 லட்சம்மோசடி: நக்மாவிடம் கேட்க சொல்லி அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சரத்குமார் ரூ. 95 லட்சம் மோசடி செய்து விட்டதாக இரும்பு வியாபாரி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவைச் சேர்ந்த சுபோத் குமார் என்பவர் போலீஸ் கமிஷனர் லத்திகா சரணைசந்தித்து கொடுத்த புகார் விவரம்:

நான் லட்சுமி இன்டர்நேஷனல் என்ற பெயரில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த 96ம் ஆண்டுநடிகர் சரத்குமார் எனக்கு அறிமுகமானார். கோவையில் மருத்துவமனை கட்டி வருவதாகவும், அதற்காக ரூ. 20லட்சம் கடன் வேண்டும் என்றும் கேட்டார்.

Sarathkumar
அவர் கேட்ட தொகையை 3.5 சதவீத வட்டிக்கு கடனாக கொடுத்தேன். கடன் தொகைக்கு அத்தாட்சியாக இரண்டுஐம்பது ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் சரத்குமார் கையெழுத்திட்டு கொடுத்தார்.

கடன் தொகையை ஒரு ஆண்டில் திரும்ப செலுத்தி விடுவதாக என்னிடம் கூறினார். ஆனால், கடனை திரும்பித்தரவில்லை.

இது தொடர்பாக பலமுறை அவரிடம் பேசினேன். ஆனால், அவர் சரியான பதில் தரவில்லை.

அவருக்கு கடந்த 98ம் ஆண்டில் கடிதம் எழுதினேன். அப்போதும் சரத்குமார் கடன் தொகையை திரும்பத்தரவில்லை. பதிலுக்கு ஒரு கடிதம் அனுப்பினார் சரத்குமார். அதில், நான் உங்களிடம் வாங்கிய பணத்தை நடிகைநக்மாவிற்கு கொடுத்து விட்டேன். அதில் ஒரு ரூபாய் கூட நான் செலவு செய்யவில்லை.

அதனால் நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தை நக்மாவுக்கு எழுதுங்கள். உங்களுடைய பணம் திரும்பகிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கிறேன். உங்களிடம் வாங்கிய கடன் தொகையில் ரூ. ஐந்து லட்சத்தைநான் உங்களுக்கு திரும்ப செலுத்தியுள்ளேன் என்று கூறியிருந்தார்.

Nagma
இந் நிலையில், கடந்த 13ம் தேதி மாலை சரத்குமாரின் வீட்டிற்கு சென்றேன். அப்போது சரத்குமார் என்னைசந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து சரத்குமாரை தொலைபேசியில் தொடர் கொண்டு பேசினேன்.

அப்போது சரத்குமார் என்னையே மிரட்டினார். நான் பணத்தை திரும்ப கொடுக்க முடியாது. நீ தந்த பணத்தைஅப்படியே நடிகை நக்மாவிடம் தந்துவிட்டேன். முடிந்தால் அவரிடம் போய் வாங்கிக் கொள் என்றார்.

நான் உங்களிடம் தானே பணம் தந்தேன் என்று கூறியபோது, எனக்கு தொல்லை தந்தால் உன்னை சும்மா விடமாட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் சென்னையை விட்டு குடும்பத்துடன் நீ ஓடி விட வேண்டும் என்றுமிரட்டினார்.

எனது பணமும் போய், இப்போது சரத்குமாரால் எனது குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே,அவரிடம் இருந்து எனக்கு வட்டியுடன் சேர்த்து வர வேண்டிய ரூ. 95 லட்சத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.எனக்க உரிய பாதுகாப்பும் தர வேண்டும்.

இவ்வாறு சுபோத் குமார் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

சரத்குமாரும், நடிகை நக்மாவும் கொஞ்ச காலம் மிக நெருக்கமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் அந்த உறவு ஏனோ முறிந்தது. இதனால் அவரை சரத்குமார் மிரட்ட ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்தேதமிழ் சினிமாவை விட்டு ஓடினார் நக்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+