அரசுப் பணிகளில் ஆட்களை சேர்க்க தடை நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு ஊழியர்களை சேர்க்க ஜெயலலிதா அரசுவிதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த காலி இடங்களுக்கு நேரடித் தேர்வு மூலம் ஊழியர்கள் சேர்க்கப்படுவார்கள் என தமிழக அரசுஅறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர்தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை மூலம் அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
இவற்றின் மூலம் தேர்வு செய்ய முடியாத பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாகதேர்வு, நேர்காணல் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அரசுத் துறையில் காலியாக உள்ள இடங்கள் பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை மூலமும் நிரப்பப்படும்.அரசின் தேவையை மதிப்பீடு செய்தே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications