கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஓகேனக்கல்லில் வெள்ளம் பாய்கிறது.
அருவிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் மட்டம் 124 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால்அணையில் பாதுகாப்பு கருதி, உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு 53,000 கன அடி நீர்இங்கிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் ஓகேனக்கல் வழியாக கரைபுரண்டு ஓடுகிறது. அருவிக்குச் செல்லும் நடைபாதைக்கு மேல் ஒரு அடிஉயரம் தண்ணீர் பாய்கிறது. இதனால் நடைபாதையை போலீசார் மூடி சீல் வைத்துள்ளனர்.
ஆற்றின் அருகே உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அருவி, ஆற்றில்குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றலாப் பயணிகள் ஏமாற்றத்துடன்திரும்பிச் செல்கின்றனர்.