தனியார் நிலத்தை ஸ்வாஹா செய்த ஜேப்பியார்?
சென்னை:
பிரபல கல்வி நிறுவன அதிபர் ஜேப்பியார் தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஸ்வாகா செய்துள்ளதாக சென்னைமாநகர காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தராக இருப்பவர் ஜேப்பியார். பல்வேறு கல்வி நிறுவனங்களைநடத்தி வருகிறார். அவர் மீது தி.நகரில் உள்ள இண்டஸ்ட்ரியல் வெஞ்சர் கேபிடல் நிறுவனத்தின் மேலாளர்குருமூர்த்தி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.அதில், சென்னை அருகே செம்மஞ்சேரியில் 1997ம் ஆண்டு எங்களது நிறுவனம் சார்பில் 1.3 ஏக்கர் நிலம் ரூ. 5லட்சதுக்கு வாங்கப்பட்டது. அந்த நிலத்தை பிரதீப் ரங்கநாதன், நடராஜன் ஆகியோர் எங்களிடம் விற்றனர்.
தற்போது எங்களுக்குச் சொந்தமான இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சத்தியபாமா நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஜேப்பியார் சுருட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி எங்களது நிலத்தைதிருப்பி வாங்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கூடுதல் துணை ஆணையர் அருளானந்தத்தை விசாரிக்கும்படி ஆணையர் லத்திகா சரண்உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications