ஏட்டையா உள்பட 3 பேர் வெட்டிக் கொலை!
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சென்றதலைமைக் காவலர் உள்ளிட்ட 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள குடவாசலில் இனியன் என்பவர்கடந்த ஜனவரி மாதம் வெட்டிக் கொல்லப்பட்டார்.இதுதொடர்பாக தலைமைக் காவலர் சுப்பிரமணியன், அவரது சகோதரர் ஆனந்தன்,ஸ்ரீதர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சுப்பிரமணியன் பின்னர்பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவர்கள் மீதான வழக்கு நாகை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தினசரி கையெழுத்துப் போட்டு வருகின்றனர். இன்றுகாலை நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடுவதற்காக 3 பேரும் கார் மூலம நாகைநோக்கிக் கிளம்பினர்.
வடகரை பாலம் அருகே அவர்களது கார் வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் காலைமறித்து நிறுத்தியது. பின்னர் அக்கும்பல் வெறித்தனாக காரில் இருந்தவர்களைவெட்டியது. இதில் சுப்பிரமணியன், ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
ஸ்ரீதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.காரில் இருந்த அறிவழகன், ஓட்டுனர் பாலச்சந்திரன் ஆகியோர் படுகாயங்களுடன்உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications