கடலில் தவித்த 30 பேரை காத்த இன்சாட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடுக்கடலில் 30 பேருடன் தத்தளித்த கப்பலை இன்சாட்-3 ஏ செயற்கைக் கோள் மூலம் இந்திய கடற்படையினர்காப்பாற்றினர்.
பனாமா நாட்டைச் சேர்ந்த குளோரி மூன் எனும் கப்பல் இலங்கை கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்தகப்பலில் 30 பேர் பயணம் செய்தனர். நடுக்கடலில் கப்பல் திடீரென தீ பிடித்தது.இதனால் கப்பலில் உள்ள தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கப்பலின் என்ஜினும் பழுதடைந்தது. இதனால்நடுக்கடலில் தத்தளித்தது.
இதையடுத்து கப்பலில் இருந்து ஆபத்து கால உதவி கோரி சிக்னல் தரப்பட்டது. இந்த சிக்னலை இந்தியாவின்தகவல் தொடர்பு செயற்கைகோளான இன்சாட்-3 ஏ பெற்று பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டுமையத்துக்கு தகவல் அனுப்பியது.
இதையடுத்து கடற்படையை இஸ்ரோ உஷார்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்புபடையினர் அந்தக் கப்பலை அடைந்து அதிலிருந்த 30 பேரையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications