வினாத்தாள் லீக்: கூடுதல் டிஜிபி, ஐஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை !!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழகத்தில் காவலர் தேர்வு வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில், கூடுதல் டிஜிபிபாலச்சந்திரன், ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பெங்களூரில் இன்று உண்மைகண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த 2003ம் ஆண்டும், 2004ம் ஆண்டும் இருமுறை காவலர் தேர்வு வினாத்தாள்கள்லீக் ஆகின. இதில் பல காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்தவிவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில் இருந்தபோதே, அப்போதைய டிஜிபி அலெக்சாண்டர் வீட்டில்வேலை பார்த்து வந்த காவலர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கும்வினாத் தாள் லீக் ஆனதற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அவரை சர்ச்சைபுகழ் சிவணான்டி தான் விசாரித்தார்.

சிவணான்டியால் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் மர்மமாய் இறந்தார்அந்தக் காவலர். அவர் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் அலெச்காண்டர், கூடுதல் டிஜிபி பாலச்சந்திரன்,ஐஜி ராதாகிருஷ்ணன் ஆகியோருடைய பெயர்கள் அடிபட்டன.

இதையடுத்து கூடுதல் டிஜிபி பால்சந்திரனும், ஐ.ஜி ராதாகிருஷ்ணனும் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர். இவர்களில் ராதாகிருஷ்ணன் மீண்டும் பணியில்சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை தற்போது ஐஜி துக்கையாண்டி தலைமையில் சிபிசிஐடி போலீஸார்விசாரித்து வருகின்றனர். 8 போலீஸார், 3 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

இந் நிலையில் கூடுதல் டிஜிபி பாலச்சந்திரன், ஐஜி ராதாகிருஷ்ணன் ஆகியோரைசிபிசிஐடி போலீஸார் இன்று பெங்களூர் அழைத்துச் சென்றனர்

மடிவாளாவில் உள்ள நார்கோ அனாலிஸ் ஆய்வகத்தில் வைத்து இவர்களிடம்உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+