சென்னை பள்ளிகளுக்கு மாணவி குண்டு மிரட்டல்!!
சென்னை:
சென்னையில் இன்று நான்கு பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் மிரட்டல்விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 9 மணிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியபெண், சாலிகிராமத்தில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளி, ஜெயகோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் பள்ளி,தசரதபுரம் கரியப்பா மேல்நிலைப்பள்ளி, கலைஞர் சாலை கிளாரா பள்ளி ஆகியுவற்றில் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டுள்ளன.அவை சில மணி நேரங்களில் வெடிக்கும் எனக் கூறினார்.
இதையடுத்து நான்கு பள்ளிகளுக்கும் போலீஸார் விரைந்து சென்று மோப்ப நாய்கள், வெடிகுண்டுநிபுணர்களுடன் துருவித் துருவி சோதனை போட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
போன் எங்கிருந்து செய்யப்பட்டது என்று போலீஸார் விசாரித்தபோது, அது காவேரி பள்ளி அருகே உள்ளஎஸ்.டி.டி. பூத்திலிருந்து செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சீருடை அணிந்த ஒரு மாணவிதான் அந்தசமயத்தில் போன் செய்தது தெரிய வந்தது. அந்த சீருடை காவேரி பள்ளியின் சீருடையாகும்.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவிகள் குறித்து போலீஸார் பள்ளியில் விசாரித்தபோது 2 பேர் வராததுதெரிய வந்தது. அந்த மாணவிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர்களுக்கும், வெடிகுண்டுமிரட்டலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த மாணவி யார் என்று போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் பர்மா பஜாரில் 2 மோட்டார் சைக்கிள்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததால்போலீஸார் அங்கு சோதனை நடத்தினர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.












Click it and Unblock the Notifications