பாம்பு விஷத்தை செலுத்தி மனைவியைக் கொல்ல முயன்ற கணவன்!
கோவை:
வரதட்சணை கேட்டு மனைவியின் உடலில் பாம்பு விஷத்தை செலுத்திய கொடூரக்கணவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கும்கோவையைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம்நடந்தது. இவர்களுக்கு கோமகள் என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
![]() |
அங்கு சென்ற சில நாட்களில் தனது மனைவியை பாம்பு கடித்து விட்டதாக கூறிமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மயங்கிய நிலையில் இருந்த சுமதிக்குசிகிச்சை தரப்பட்டது. சுமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு சேகர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சேகர்மீது எருமைப்பட்டி போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து சேகர்தலைமறைவாகி விட்டார்.
சுமதியை அவரது பெற்றோர் கோவைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.சிகிச்சையில் தேறிய அவர் தனது கணவர் செய்த கொடுமையை விவரித்துக் கூறினார்.சுமதி கூறுகையில், கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை கணவர் கொடுமைப்படுத்திவந்தார். மேலும் எனது தங்கைக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த அவர்எப்படியாவது திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தார்.
இதற்காக பாம்பின் விஷத்தை ஊசி மூலம் எனது உடலில் செலுத்தினார்.
பின்னர் விஷம் எடுக்கப்பட்ட அந்தப் பாம்பை கொன்று விட்டார். நான் இறந்துவிடுவேன் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் கடவுள் அருளால் நான் பிழைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் சுமதி.
இதையடுத்து சேகர் மீதான வழக்கை கோவைக்கு மாற்றி திண்டுக்கல் போலீஸார்நடவடிக்கை எடுத்துள்ளர். சேகர் மீது வரதட்சணைக் கொடுமை, கொலை முயற்சிவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications