மாணவி தற்கொலை வழக்கு-காதலனும் தற்கொலை
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ஈவ் டீசிங் காரணமாக பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரதுகாதலரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது உடலை ஊர் மக்கள்போலீஸாருக்குத் தெரிவிக்காமல் எரித்து விட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை அடுத்த கும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச் செல்வி. இவர்நாகர்கோவிலில் விடுதியில் தங்கி பிளஸ்டூ படித்து வந்தார். அவருடன் படித்த தோழியின் அண்ணனுக்கும்,முத்துச்செல்விக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்குப் போயுள்ளனர்.இருவரும் ஜாலியாக இருப்பதை பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரும், அவரது நண்பர்களும் சேர்ந்துசெல்போன் கேமரா மூலம் படம் பிடித்துள்ளனர்.
இதை வைத்துக் கொண்டு, முத்துச்செல்வி பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும் கேலி செய்துவந்துள்ளனர். இது முற்றிப்போய், என்னுடனும் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்தப்படங்களை எல்லோருக்கும் அனுப்புவேன் என்று அந்த பொறியியல் கல்லூரி மாணவர் மிரட்டியுள்ளார்.
மேலும் முத்துச்செல்வியின் படத்தை கிராபிக்ஸ் உதவியால் நிர்வாணப் படம் போல வரைந்தும் காட்டிமிரட்டியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த முத்துச்செல்வி கடந்த 13ம் தேதி ஊருக்குச் சென்றார். அங்கு தனது தாயாரிடம் நடந்தசம்பவம் குறித்து சொல்லி அழுதுள்ளார். பின்னர் இரவு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ராதாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அவர்களிடம், தனதுமகள் ஈவ் டீசிங் காரணமாகத்தான் இறந்ததாக த்துச் செல்வியின் தாயார் தெரிவித்தார். இதையடுத்து அந்தநபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கினர்.
அப்போது அவர்களுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. முத்துச் செல்வி இறந்து விட்டார் என்ற தகவலை அறிந்தஅவரது காதலர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நாளே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் போலீஸ், நீதிமன்றம் என அலைய வேண்டி வரும் என்று பயந்த அந்தஇளைஞரின் குடும்பத்தினர், ஊர் மக்களுடன் சேர்ந்து உடலை எரித்து விட்டனர். இதுகுறித்து போலீஸாருக்கும்அவர்கள் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications