ஜெயலலிதா ரொம்ப பயப்படுகிறார்: வாசன்
சேலம்:
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஜெயலலிதா பயப்படுகிறார் என்ற மத்திய அமைச்சர் ஜிகே.வாசன்தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு அளவில் மக்கள் வெற்றியை தந்தார்கள். சட்டமன்றதேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்து அவரை ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கினார்கள்.
தற்போது மத்தியிலும், தமிழகத்திலும் நல்லாட்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆட்சிகள் மீது மக்கள் நம்பிக்கைவைத்து இருக்கிறார்கள். இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்.
இந்த உண்மையை உணர்ந்துள்ள அதிமுகவினரும், அந்த கட்சியின் பொது செயலாளருமான ஜெயலலிதாஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயங்கிறார்கள். அந்த பயத்தில் தான் அவ்வப்போது ஜெயலலிதா அறிக்கைகளைவெளியிட்டு வருகிறார். பரபரப்பான அறிக்கைகளை விட்டு மக்களை குழப்பி, ஏமாற்ற எண்ணுகிறார்ஜெயலலிதா. அவரது எண்ணம் நிறைவேறப் போவதில்லை என்றார்.