2 மணி நேரம் முட்டி: 25 மாணவிகள் மயக்கம்-ஆசிரியையின் கொடூரம்!
ஓசூர்:
பள்ளியில் ஆசிரியை 2 மணி நேரம் முட்டி போட வைத்ததால், 25 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதனால் ஆசிரியைகள் அனைவரும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள போயிருந்தனர்.அப்போது 8ம் வகுப்பு டி பிரிவு மாணவிகள் சப்தமாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து கூட்டஅரங்கிலிருந்து வந்த ஆசிரியை அல்போன்சா, மாணவிகளைத் திட்டினார். பின்னர் அனைவரும் முட்டிபோடுமாறு கூறி விட்டு கூட்டத்திற்குச் சென்று விட்டார்.
கிட்டத்தட்ட 2 மணி நேரமாக மாணவிகள் முட்டி போட்ட நிலையில் இருந்தனர். இதனால் 25 மாணவிகளுக்குமயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஆசிரியைகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துஆசிரியைகளும் விரைந்து வந்து மயங்கி விழுந்த மாணவிகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளி நேரம் முடிந்தும் வழக்கமாக வீடு திரும்பும் பெண்கள்இன்னும் வரவில்லையே என்று பீதி அடைந்த 25 மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
அங்கிருந்த ஆசிரியைகளிடம் விளக்கம் கேட்டபோது நடந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்தபெற்றோர்கள், ஆசிரியர்களைத் திட்டித் தீர்த்தனர். பின்னர் மருத்துவமனைக்குச் சென்று தங்களது பிள்ளைகளைபார்க்க ஓடினர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை அல்போன்சா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின்பெற்றோர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.--ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதனால் ஆசிரியைகள் அனைவரும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள போயிருந்தனர்.
அப்போது 8ம் வகுப்பு டி பிரிவு மாணவிகள் சப்தமாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து கூட்டஅரங்கிலிருந்து வந்த ஆசிரியை அல்போன்சா, மாணவிகளைத் திட்டினார். பின்னர் அனைவரும் முட்டிபோடுமாறு கூறி விட்டு கூட்டத்திற்குச் சென்று விட்டார்.
கிட்டத்தட்ட 2 மணி நேரமாக மாணவிகள் முட்டி போட்ட நிலையில் இருந்தனர். இதனால் 25 மாணவிகளுக்குமயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஆசிரியைகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துஆசிரியைகளும் விரைந்து வந்து மயங்கி விழுந்த மாணவிகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளி நேரம் முடிந்தும் வழக்கமாக வீடு திரும்பும் பெண்கள்இன்னும் வரவில்லையே என்று பீதி அடைந்த 25 மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
அங்கிருந்த ஆசிரியைகளிடம் விளக்கம் கேட்டபோது நடந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்தபெற்றோர்கள், ஆசிரியர்களைத் திட்டித் தீர்த்தனர். பின்னர் மருத்துவமனைக்குச் சென்று தங்களது பிள்ளைகளைபார்க்க ஓடினர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை அல்போன்சா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின்பெற்றோர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications