கூப்பிட்டது தோழியின் ஆவி-மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே பம்மல் பகுதியில் தோழியின் ஆவி தன்னைக் கூப்பிடுவதாகசொல்லி வந்த பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகம் என்பவரின் மகள் மோகனா. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவாமகளிர் கல்லூரியில் படித்து வந்தார். மோகனாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்ஆஷா. இருவரும் நெருங்கிய தோழிகள்.சில மாதங்களுக்கு முன் ஆஷா தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல்மோகனா பயத்துடனேயே காணப்பட்டார். ஆஷாவின் ஆவி சுற்றிக்கொண்டிருப்பதாகவும், அது தன்னை கூப்பிடுவதாகவும் இரவு நேரங்களில் திடீரெனஎழுந்து உட்கார்ந்து கொண்டு கூறுவாராம்.
இதனால் மோகனாவின் பெற்றோர் அவரை ஒரு கோவிலுக்குக் கூட்டிக் கொண்டுபோய் மந்திரித்துப் பார்த்துள்ளனர். அப்படியும் ஆவி பிரச்சினைக்கு முடிவுவரவில்லை.
இந் நிலையில் மோகனா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆவி கூப்பிட்டதால் மோகனா தற்கொலைசெய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications