உள்ளாட்சி தேர்தல்-அதிமுகவுடன் கூட்டணி: வைகோ
சென்னை:
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என மதிமுக பொது செயலாளர் வைகோகூறியுள்ளார்.
மதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உயர்நிலைகுழு ஆட்சி மன்றகுழு அரசியல் ஆலோசனைக் கூட்டம்நடந்தது. அதில் வைகோ பேசியதாவது,மதிமுக லட்சோப லட்சம் தொண்டர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து ஓரிருவர்சபலங்களாலும், ஆதாயங்களுக்காகவும் சென்று இருக்கலாம். அவர்களைப்பற்றி கவலை இல்லை.
மதிமுக தொண்டர்கள் தங்களுக்கு என்ன லாபம் என்று இல்லாமல், அண்ணாவின் கொள்கை உறுதியோடு,குடும்ப பாச உணர்வோடு, உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இந்த இயக்கத்தை கட்டிக் காக்கிறார்கள்.நாம் எல்லோரும் ஒருமித்து எடுத்த முடிவுதான் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது.
இதே கூட்டணியோடு உள்ளாட்சி மன்ற தேர்தலையும் வெற்றிகரமாக சந்திப்போம் நிறை இடங்களைகைப்பற்றுவோம் என்றார்.
இக்கூட்டதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
மேயர், நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் அவசர சட்டம் கொண்டு வந்திருப்பதைகண்டிக்கிறோம். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
இலங்கைக்கு ராணுவ உதவிகளை மத்திய அரசு வழங்க கூடாது. அப்பாவி தமிழர்களை வேட்டையாடும்இலங்கை அரசுக்கு வழங்கிய ரேடர்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
கடலில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மீனவர்கள் அச்சத்தை போக்கஇலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
இலங்கையில் இருந்து வரும் அகதிகளுக்கு இந்திய கடற்படை உதவ வேண்டும். அகதிகள் முகாமை நல்லமுறையில் பராமரிக்க வேண்டும்.
சிக்குன் குனியா நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்மெத்தனமாக இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் போன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications