வீடு: அதிமுக ஆட்சியில் முறைகேடு-கருணாநிதி
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தில்பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதால் அந்தத் திட்டத்தின் கீழ்பயன் பெறும் பயனாளிகளின் பட்டியல் மறு ஆய்வு செய்யப்படும் என முதல்வர்கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று காலை தொடங்கியது.முன்னதாக சபை கூடியதும் மறைந்த உறுப்பினர்கள் சோ.பாலகிருஷ்ணன், தென்னரசுஉள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஆவுடையப்பன்வாசித்தார். இதையடுத்து உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலிசெலுத்தினர்.அதன் பின்னர் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களுக்கு சபையில்இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. அதிமுகஉறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
காங்கிரஸ் உறுப்பினர் பீட்டல் அல்போன்ஸ் பேசுகையில், கடந்த அதிமுகஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில் பெரும்முறைகேடுகள் நடந்துள்ளன. பயனாளிகளை தேர்வு செய்வதில் அதிமுக அரசுபாரபட்சம் காட்டியுள்ளது என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் சபையில் தாக்கல்செய்தார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, பீட்டர் அல்போன்ஸ் காட்டும்ஆதாரங்களைப் பார்த்தால் இத்திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியல் மறுஆய்வு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications