மகன்களின் பண வெறி-80 வயது பாட்டி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பணத்திலேயே மகன்கள் குறியாக இருந்ததால் வேதனை அடைந்த 80 வயது பாட்டிதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் தங்கம்மாள். 80 வயதான இவருக்கு 3 மகன்கள்,1 மகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டார். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகிதனித்தனியே வசித்து வருகின்றனர். தனது மகள் சுகுனா வீட்டில் தங்கம்மாள் வசித்துவந்தார்.அவரது கணவர் அரசு வேலை பார்த்தவர் என்பதால் அவரது ஓய்வூதியம்தங்கம்மாளுக்குக் கிடைத்து வந்தது. அந்தப் பணத்தைப் பெற 3 மகன்களுக்கும்இடையே போட்டா போட்டி நடந்தது.
அடிக்கடி சுகுனாவின் வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுக்குமாறு 3 பேரும்தங்கம்மாளை டார்ச்சர் செய்து வந்தனர். இதனால் தங்கம்மாள் வேதனை அடைந்தார்.
உட்கார வைத்து ஒரு வேளை சாப்பாடு கூட முன்வராத தனது மகன்கள் தன்னுடையபணத்தை மட்டும் கேட்டது அவரது மனதை நோகடித்தது. இதனால் மனம் உடைந்தஅவர் சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications