செளதி-டி.சி.எஸ். ரூ 758 கோடி ஒப்பந்தம்!
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டி.சி.எஸ்), செளதி தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ரூ. 758 கோடி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.செளதி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது, தொலைபேசி பில்கள்தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான ஒப்பந்தம் இது. இந்தத் திட்டத்தில் தகவல்தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவான்களான கன்வெர்ஜிஸ் மற்றும் ஓரக்கிள் ஆகிய நிறுவனங்களும் பங்கெடுக்கஉள்ளன.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவன தலைவர் ராமதுரை கூறுகையில், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில்,டி.சி.எஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய திட்டம் இது.செளதி அரேபியாவில் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்த இந்தத் திட்டம் மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications