டெல்லி: ஸ்கூல் பஸ் மீது ஆசிட் வீச்சு-8 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் ஆசிட் போன்ற ரசாயனம் வீசப்பட்டது. இதில் 8 குழந்தைகள்காயமடைந்தனர்.
நாடு முழுவதும் பள்ளிகள், அலுவலகங்கள், ரயில்களில் குண்டுப் புரளி பீதிகளுக்கு இடையே இந்தச் சம்பவம்நடந்துள்ளது.வடக்கு டெல்லியில் உள்ள சராய் ரோகில்லா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் சென்ற பஸ்சின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரசாயனத்தை ஜன்னல் வழியாகவீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் 8 குழந்தைகளின் மீது அந்த ரசாயனம் தெறித்தது. இதையடுத்து அலறித் துடித்த அந்த பிஞ்சுக் குழந்தைகள்உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.இதனால் முதலுதவி சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.












Click it and Unblock the Notifications