For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலாறு: ஸ்டாலின்-பொன்முடி ஆந்திரா பயணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம் மற்றும் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரை விடுவிக்கும் பிரச்சினை குறித்து ஆந்திர மாநில முதல்வருடன் விவாதிப்பதற்காகதமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆகஸ்ட் 5ம் தேதிஹைதராபாத் செல்கின்றனர்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டுகாங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில்,

பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணைகட்டப்பட்டால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் வறண்டு போகும். இங்குள்ளவிவசாயிகள் பெரும் பாதிப்படைவார்கள். எனவே இத்திட்டத்தை தமிழக அரசுதடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதற்கு பொதுப் பணித்துறையை கூடுதலாக கவனிக்கும் அமைச்சர் பொன்முடிகூறுகையில், நானும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் (ஸ்டாலின்) ஆகஸ்ட் 5ம் தேதிஹைதராபாத் செல்கிறோம்.

அப்போது அம்மாநில மதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன்பாலாறு விவகாரம், கிருஷ்ணா நதி நீர் குறித்தும் விவாதிக்கவுள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X