இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்-அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
வாஷிங்டன்:
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தியா-அமெரிக்கா இடையிலான சிவில் அணு சக்திஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (ஹவுஸ் ஆப்ரெப்சன்டேவிஸ்) ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 359ஓட்டுக்களும், எதிராக 68 வாக்குகளும் கிடைத்தன.
இந்தியா, அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்க அணு சக்தி தொழில்நுட்பம், அணு உலைகளுக்குத் தேவையானஎரிபொருள் உள்ளிட்டவை இந்தியாவுக்குக் கிடைக்கும்.இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் அமலாக அமெரிக்க நாடாளுமன்றத்தின்இரு அவைகளும் ஒப்புதல் தர வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள்சபையான காங்கிரசில் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் மீது கிட்டத்தட்ட ஐந்துமணி நேரம் காரசாரமான விவாதம் நடந்தது.
அதன் இறுதியில் தீர்மானம் ஒட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது தீர்மானத்திற்குஆதரவாக 359 பேரும், எதிராக 68 பேரும் வாக்களித்தனர்.
ரிபப்ளிகன்ஸ், டெமாக்ரேட்க்ஸ் ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதன்மூலம் இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்க அமெரிக்கஅரசுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதனால் இந்தியாவுக்கு அணு சக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள்வழங்குவதற்கு அமெரிக்கா விதித்திருந்த 30 ஆண்டு கால தடை முடிவுக்கு வருகிறது.அதிபர் புஷ்ஷுக்குக் கிடைத்த தனிப்பட்ட வெற்றியாக இது கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் அணு சக்தி ஆய்வுக்கு அமெரிக்கா முழுஒத்துழைப்பு அளிக்கும். பதிலுக்கு, சர்வதேச அணு சக்தி கழகத்தின்கண்காணிப்புக்கும் ஆய்வுக்கும் தனது அணு நிலையங்களை இந்தியா அனுமதிக்கவேண்டும்.
முன்னதாக இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கநாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தில் திருத்தங்கள்செய்வதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று பிரதமர் மன்மோகன் சிங்திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் புஷ்சும்-சிங்கும் அமெரிக்காவில் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தில் எந்தமாற்றமும் செய்யாமலேயே பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.