மனைவியை வெறித்தனமாக குத்திக் கொன்ற ஊனமுற்ற சிங்கப்பூர் தமிழர்!
சிங்கப்பூர்:
மனைவியை வெறித்தனமாக குத்திக் கொன்றதாக சிங்கப்பூரைச் சேர்ந்த இருகால்களும் இல்லாத 51வயது தமிழர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள புகிட் பட்டோக் குடியிருப்பில் வசித்துவந்தவர் ரெஜினா தேவசகாயம் (வயது 45). இவரது கணவர் பிரான்ஸிஸ செல்வராஜ்(வயது 51).சர்க்கரை வியாதி காரணமாக செல்வராஜின் இரு கால்களும் அறுவைச் சிகிச்சை மூலம்துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் அவரால் வேலை பார்கக முடியவில்லை.வீட்டோடு இருந்து வந்தார்.
ரெஜினா துப்புறவு வேலையில் ஈடுபட்டு தனது கணவரைக் காப்பாற்றி வந்தார். இந்தநிலையில், 12 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் சமைலயலுக்குப் பயன்படுத்தும்கத்தியை எடுத்து தனது மனைவியை குத்தினார் செல்வராஜ். சரமாரியாக அவர்குத்தியதில் ரெஜினா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரது உடலில் ஐந்து இடங்களில்கத்திக் குத்து விழுந்தது.
தாயின் கூக்குரல் கேட்டு இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது இருதிருமணமான மகள்களும், ஒரு மகனும் விரைந்து வந்து பார்த்தபோது ரெஜினாஉயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிரசிகிச்சை அளித்தும் அவர் 12 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். மனைவியைக்கொலை செய்த குற்றத்திற்காக செல்வராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications