வார்டன் கண்டித்ததால் மாணவி தற்கொலை
தூத்துக்குடி:
விடுதி வார்டன் கண்டித்ததால் மனம் உடைந்த 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர்சுப்புலட்சுமி. 15 வயதான இவர்தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில்தங்கியிருந்த இவர் சனிக்கிழமை அங்கிருந்த தொலைபேசியில் பேசியுள்ளார். இதைப்பார்த்த வார்டன் சுடலைவடிவு, மாணவியை கண்டித்துள்ளார்.இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுதியில் உள்ள ஒரு அறையின் பூட்டைத்திறந்து அங்கிருந்த ஆடையை எடுக்க முயன்றுள்ளார் சுப்புலட்சுமி. இதைப் பார்த்தவார்டன் பூட்டை வாங்கி சுப்புலட்சுமியை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த சுப்புலட்சுமி, தனது வகுப்பறைக்குச் சென்று தாவணியால்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வார்டன் கண்டித்ததால் தான் சுப்புலட்சுமி தூக்குப் போட்டதாக பிற மாணவிகள்குற்றம் சாட்டியதோடு, பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில்குதித்தனர்.
சுப்புலட்சுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் பள்ளியின் முன்பு கூடி வார்டனைகைது செய்ய கோரி போராட்டத்தில் குதித்தனர். மேலும் சாலை மறியலிலும்இறங்கினர்.
பின்னர் போலீஸார் சமாதானப்படுத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.