அதிகாரி விட்ட பளார்: தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்பெக்டர்
சென்னை:
கன்னத்தில் அறைந்து தனது மேலதிகாரி அவமானப்படுத்தியதால், மனம் உடைந்தசென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் சென்னைமாநகர காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் அந்த இன்ஸ்பெக்டர்பணியாற்றி வந்தார்.சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர்,ஒரு வழக்குத் தொடர்பாக இன்ஸ்பெக்டரை அணுகி தனக்கு சாதகமாக நடக்குமாறுகோரியுள்ளார்.ஆனால் இதற்கு அந்த இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்துஅந்த ஆளுங்கட்சிப் பிரமுகர், இன்ஸ்பெக்டரின் மேலதிகாரியிடம் சென்று, உங்களதுபெயரைச் சொல்லி இன்ஸ்பெக்டர் என்னிடம் ரூ.30,000 பணம் வாங்கி விட்டதாகபுகார் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த அதிகாரி, இன்ஸ்பெக்டரை தனது அலுவலகத்திற்குஅழைத்துள்ளார். அவர் வந்தவுடன் என்ன ஏது என்று கூட விசாரிக்காமல், பிறஊழியர்கள் முன்னிலையில் இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர், மனம் உடைந்த நிலையில் வீட்டுக்குத்திரும்பியுள்ளார். ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
பதறிப் போன அவரது குடும்பத்தினர், உடனடியாக தனியார் மருத்துவமனைக்குஅவரை அழைத்துச் சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அந்தஇன்ஸ்பெக்டர் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சம்பவம் காவல்துறையில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த அதிகாரி, இன்ஸ்பெக்டர் வீட்டைத்தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரச்சினையைபெரிதாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டாராம்.
இதனால் இன்ஸ்பெக்டரும் நடந்ததை மறந்து விட்டு பணியில் சேர்ந்துள்ளார். ஆனால்தற்போது அவர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தினமும் மாநகர காவல்துறை ஆணையரகத்தில் ரிப்போர்ட் செய்யுமாறும் அவர்பணிக்கப்பட்டுள்ளார்.
அப்ப அந்த ஆளுங்கட்சி ஆசாமியை விட்டாச்சா..? அவருக்கு தண்டனைகிடையாதா?












Click it and Unblock the Notifications