சிற்பி பாலசுப்ரமணியத்துக்கு முத்தையா செட்டியார் விருது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு, இந்த ஆண்டுக்கான ராஜா சர்முத்தையா செட்டியார் விருது வழங்கப்படுகிறது.
கல்வி, கலை, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்குஆண்டுதோறும் முத்தையா செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் விருதுவழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு சிற்பி பாலசுப்பிரமணியம் தேர்வுசெய்யப்படடுள்ளர்.முன்னாள் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், ரத்தினவேல் பாண்டியன், குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் ஆகியோரைக் கொண்ட குழு சிற்பியை தேர்வு செய்துள்ளது.
சிறந்த எழுத்தாளரான சிற்பி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்தமிழ்த துறைத்தலைவராக பணியாற்றியுள்ளார்.
ஏராளமான கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.சாகித்ய அகாடமியின் மொழி பெயர்ப்புக்கான விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருதுஉளளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த விருது வழங்கும் விழா வருகிற 5ம்தேதி ராணி சீதை மன்றத்தில்நடைபெறுகிறது. நிதியமைசசர்க.அன்பழகன் சிற்பிக்கு விருதினை வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications