பூசாரியின் கொடூரம்-சிறுமியை கடித்து குதறினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி, வெறியில் அந்தசிறுமியின் உடல் முழுவதையும் கடித்துக் குதறினர்.அந்த காமக் கொடூர பிசாசைபோலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சென்னை முகப்பேர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த தம்புராஜ் என்பவரின் மகள் புனிதா(வயது 7). குழந்தைகளோடு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இச் சிறுமியைஅங்குள்ள மரகதீஸ்வரர் கோவிலின் பூசாரி ராஜு (வயது 60) கோவிலுக்குள்அழைத்தார்.

பிரசாதம் தருகிறேன் என்று கூறி கோவில் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றராஜு, சிறுமியை நாசப்படுத்தினார். ஒருகட்டத்தில் வெறி அதிகமாகி, சிறுமியின் உடல்முழுவதும் கடித்துக் குதறினார்.

பலத்த காயமடைந்த புனிதா வலிபொறுக்க முடியாமல் கதறி அழவே, கத்தியைக்காட்டி அவளை மிரட்டியுள்ளார்.

விளையாடும்போது கீழே விழுந்து விட்டதாகத் தான் எல்லோரிடமும் கூறவேண்டும்.நடந்ததைச் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அனுப்பி விட்டார்.

ஆனால் புனிதா வந்த கோலத்தைப் பார்தது பயந்து போன தாயார் எனன நடந்ததுஎன்று கேட்கவே நடந்ததைக் கூறினாள் புனிதா. இதையடுத்து கோவில் பூசாரியின்வீட்டுக்கு புனிதாவின் குடும்பத்தினரும, அக்கம் பக்கத்தினரும் சென்றனர்.

ஆனால் அங்கு பூசாரி இல்லை. தப்பியோடிவிட்டார். இதையடுதது புனிதாவின்பெற்ரோரும், உறவினர்கள்,பொது மக்களும் இணை ஆணையர் சந்தீப் ரத்தோடைசந்தித்து புகார் கொடுத்தனர்.

பலத்த காயத்துடன் காணப்படட புனிதாவைப் பார்தது அதிர்ச்சி அடைந்த இணைஆணையர் சந்தீப் ரத்தோட், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்குஉத்தரவிட்டார்.

முகப்பேர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பூசாரி தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+