ஸ்கூலுக்குப் போவதாய் சொல்லிவிட்டு வீடுகளில்கொள்ளை-மாணவன் சிக்கினான்- 30 பவுன் மீட்பு
சென்னை:
பள்ளிக்கு செல்வதாகக் கூறிவிட்டு பகல் நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்துநகைகளைத் திருடி வந்த பள்ளி மாணவன் பிடிபட்டான். அவனிடமிருந்து 30 பவுன்நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை அயனாவரம் பகுதியில் சமீப காலமாக பட்டப் பகலில் வீட்டை உடைத்துகொள்ளை நடப்பது அதிகரித்துள்ளது.இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அயனாவரம் உதவிகமிஷனர் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில்தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின்பேரில் எழில் பிரகாஷ் (17) என்ற பள்ளி மாணவன்சிக்கினான்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோசு பல வீடுகளைை உடைத்து நகைகள்கொள்ளையடித்தது தெரிய வந்தது.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டதால் மாமா வீட்டில் தங்கி பள்ளியில்படித்து வரும் எழில் பிரகாஷ், பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு இந்த பூட்டுஉடைப்பு, நகை கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.
தெருக்களில் யூனிபார்மோடு திரிந்த இவனை யாரும் சந்தேகிக்கவில்லை.பூட்டியிருக்கும் வீட்டு வாசலில் போய் உட்கார்ந்து படிப்பது போல நடிப்பது,அப்படியே திருட்டு சாவிகளை வைத்து பூட்டை உடைத்துக் கொண்டு புகுந்துநகைகள், பணத்தை அள்ளிக் கொண்டு எஸ்கேப் ஆவது என்று கைவரிசை காட்டிவந்துள்ளான் எழில்.
திருடிய நகைகளை அயனாவரம் ரயில்வே கல்யாண மண்டப பகுதியில் மண்ணில்புதைத்து வைத்துளளதாக இவன் தந்த தகவலையடுத்து போலீசார் அங்கு தோண்டிப்பார்த்தபோது, 30 பவுன் நகைகள் சிக்கின.
சமீபகாலத்தில் மட்டும், அயனாவரத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான புஷ்பா,கெளரி சங்கர், தருண் ராஜ்குமார், பாண்டியன் ஆகியோரது வீடுகளில் இவன் பூட்டைஉடைத்து திருடியுள்ளான்.












Click it and Unblock the Notifications